அம்பத்தூரில் குட்கா பறிமுதல்

405 0

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு குடோனில் இருந்து ரெட்ஹில்ஸ் அருகேயுள்ள சூரப்பட்டிற்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் மற்றும் 850 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா கடத்தலுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் செயல்படும் குடோன்களில் குட்கா பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம், குட்கா கடத்தல்காரர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருட்களால் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், 850 கிலோ குட்காவை அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

– நிருபர் நாராயணன்

Related Post

தேர்தலை புறக்கணிக்க திருச்செந்தூர் மக்கள் முடிவு

Posted by - April 9, 2024 0
திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித…

அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

Posted by - April 2, 2022 0
சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை…

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை சுட்ட சிங்கப்பெண்

Posted by - July 31, 2024 0
இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார். விண்வெளி ஆய்வு,…

ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

Posted by - June 3, 2023 0
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள்…

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.