அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

949 0

சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை சார்பில், ஸ்ரீவாரு பார்த்தசாரதி பேலஸ் மண்டபத்தில் இவ்விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு கலந்துகொண்டார்.

மேலும் சென்னை அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், அம்பத்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளிக் குழுமத்தின் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இச்சங்கத்தின் அயப்பாக்கம் கிளை தலைவர் டி.லட்சுமணன், கெளரவத் தலைவர் கே.சுப்பையா, கங்கா ஸ்வீட்ஸ் நிறுவனர் நல்லையா, ஹரிதாஸ், மெஜஸ்டிக் வி.எம்.பிரபாகர் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து சுருதிலயா குழுவினர் சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. யுகாதி கொண்டாட்ட விழாவில் ஏராளமான மக்கள் குடும்பம் சகிதமாக ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு தேநீர் மற்றும் இரவு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது

விழா இறுதியில், சங்கத்தின் அயப்பாக்கம் கிளை பொருளாளர் ராஜி நன்றியுரை நிகழ்த்தினார். இதையடுத்து விழா இனிதே நிறைவுபெற்றது

– நிருபர் ஆர்.நாராயணன்

Related Post

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

10 கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2022 0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையில் உள்ள…

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜேம்ஸ் இல்லத் திருமண விழா

Posted by - February 24, 2022 0
புகைப்படம்: புலித்தேவன் சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின்…

இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

Posted by - November 16, 2022 0
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில்…

பரபரப்பாக விற்பனை ஆகும் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்

Posted by - January 17, 2024 0
நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.