ஆவடி மேயர் வாய்ப்பு யாருக்கு தெரியுமா?

759 0

சென்னையை அடுத்த ஆவடி பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், முதல் மேயர் வாய்ப்பு யாருக்கு என்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

முதலமைச்சர் மு..ஸ்டாலினுடன் சுமார் 50 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு கொண்டுள்ள ஆவடி எம்எல்ஏ நாசர் பால்வளத்துறை அமைச்சராக உள்ள நிலையில், மேயர் வாய்ப்பு அவரது மகன் ஆசிம் ராஜாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் சீனியர் ஒருவருகக்கு மேயர் பதவியை வழங்குவது குறித்தும் கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது.

ஒருவேளை மேயர் பதவி இல்லாவிட்டாலும் துணை மேயர் பதவி அமைச்சர் நாசரின் மகனுக்கு உறுதி என நமது ஊர்குருவி தகவல்கள் கூறுகின்றன.

ஆவடியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 35 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே, தாம்பரம் மேயர் பதவிக்கு தாம்பரம் எம்எல்ஏ ராஜா மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆதரவாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கவுன்சிலர்களை கவர்ந்திழுக்க பேரம் “ஒன் சி” ரேஞ்சில் பேசப்படுவதாக தகவல் பரவி வருகிறது. மேயர் பதவியை போல துணை மேயர் பதவிக்கும் போட்டி நிலவுவதால், பல்லாவரம் மற்றும் தாம்பரம் தரப்பினருக்கு, ஆளுக்கு ஒரு பதவியை ஒதுக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த தரப்புக்கு மேயர் பதவி என்பதில் மட்டும் இழுபறி நீடிக்கிறது. இறுதி முடிவு முதலமைச்சரின் கையில்…!

ஊர்குருவி இரை தேடி பறந்தது…

Related Post

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

அம்பத்தூரில் டாஸ்மாக் பார் ஆக மாறிய நடைபாதை

Posted by - June 30, 2023 0
சென்னையில் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மாலை நேரங்களில் அருகேயுள்ள நடைபாதையே பாராக இயங்கி வருகின்றன. இது குடிமகன்களுக்கு குஷியாக…

சென்னை அம்பத்தூரில் தேசியக் கொடி அவமதிப்பு

Posted by - March 27, 2023 0
நீங்கள் காணும் மனதை வேதனை அடையச் செய்யும் இந்த புகைப்படம், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் (86-வது வார்டு) ராமபூர்ணம் நகர் விரிவாக்கம் 4-வது குறுக்குத்…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜேம்ஸ் இல்லத் திருமண விழா

Posted by - February 24, 2022 0
புகைப்படம்: புலித்தேவன் சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.