இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

850 0

ந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில் பிரிட்டன் அரசு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஆண்டுதோறும் 3,000 இந்தியர்களுக்கு பிரிட்டன் அரசு கிரீன் விசா வழங்கவுள்ளது. .

இந்தோனேசியாவில் உள்ள பழங்கால இந்திய கலாச்சார அடையாளங்களை கொண்ட பாலி தீவில், சக்திவாய்ந்த உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 மாநாடு நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஸீ ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை, இந்தியப் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரிட்டன் அரசு விசா தொடர்பான முக்கிய அறிவிப்பை உடனடியாக வெளியிட்டது.

பிரிட்டன் அரசின் இந்த புதிய அறிவிப்பு மூலம், பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலான இந்தியர்கள் கிரீன் விசா மூலம் 2 ஆண்டுகள் வரை, பிரிட்டனில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளால் இந்த வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. சர்வதேச ஊடகங்களும் ஜி-20 மாநாட்டில் மோடி ஆற்றிய உரையை முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Related Post

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

IJK தலைவர் ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா

Posted by - July 17, 2023 0
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற…

சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

Posted by - November 10, 2021 0
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்தலை குறிவைத்து புதிய…

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

டுவிட்டர் டிரெண்டிங் – மிரண்டுபோன TNPSC

Posted by - March 9, 2023 0
சோசியல் மீடியாவில் தேர்வர்கள் போட்டுத் தாக்கியதில், மிரண்டுபோன TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஒருவழியாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 397 கிராம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 1 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.