ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை சுட்ட சிங்கப்பெண்

253 0

இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்.

விண்வெளி ஆய்வு, ஏவுகணைத் தயாரிப்பு, அணுகுண்டு சோதனை, தகவல் தொழில்நுட்பம், கிரிக்கெட் என்று சகலத் துறையிலும் சக்கைப்போடு போடும் இந்தியா, தற்போது ஒலிம்பிக்கிலும் ஒளிரத் தொடங்கியிருக்கிறது.

கடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி வீரர் நீரஜ் சோப்ரா இந்தியர்களின் கவுரவத்தை காப்பாற்றியது போல், தற்போது மனு பாக்கர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்த மனு பாக்கர், பள்ளி பருவத்தில் ஸ்கேட்டிங், டென்னிஸ், பாக்சிங் என சகல விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

2016 ரியோ ஒலிம்பிக்கின் போது ஷூட்டிங் மீது கவனத்தை திருப்பியுள்ளார். இதையடுத்து, 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தகுதி சுற்றிலேயே தனது துப்பாக்கி பழுதானதால், அப்போட்டியில் இருந்து வெளியேறினார் மனு பாக்கர்.

தற்போது, பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதலில் நமக்கு 2 வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்திருக்கிறார்.

ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்திருக்கிறார்.

பிரதமர் மோடி அவரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். கிருஷ்ணர் மீது பெரும் பக்தி கொண்டவர் மனு பாக்கர். ரியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய போது பகவத் கீதையின் வசனங்களே தனக்கு ஊக்கமளித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

– நிருபர் நாராயணன்

Related Post

மனிதனை காதலிக்கும் சிட்டுக்குருவிகள்

Posted by - March 20, 2025 0
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக…

10 கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2022 0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையில் உள்ள…

பரபரப்பாக விற்பனை ஆகும் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்

Posted by - January 17, 2024 0
நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

Posted by - November 10, 2021 0
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்தலை குறிவைத்து புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.