கேப்டன் விஜயகாந்த் காலமானார்

486 0

டிகர், அரசியல்வாதி, கல்வியாளர் என்ற வரிசையில் நல்ல மனிதராக மக்களால் கொண்டாடப்பட்ட கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71.

மதுரை அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயகாந்த் சினிமா மீது தீராக்காதல் கொண்டவர். ஆரம்பத்தில் தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் சூபர்வைசராக பணியாற்றினார்.

1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது தீவிரப்பற்றுக் கொண்ட விஜயகாந்த் அவரது பெயரை தனது மகனுக்கு சூட்டி மகிழ்ந்தார்.

மேலும், 1991-ம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் திரைப்படம் அவரது 100-வது படமாக வெளிவந்து வெள்ளிவிழா கண்டது. இந்த படம் தான் விஜயகாந்துக்கு கேப்டன் என்னும் அடைமொழியை தந்தது.

தமிழ் சினிமாில் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திறமையாக செயல்பட்டு சங்கத்தின் கடனையும் அடைக்கச் செய்தார்.

கடந்த 2005-ல் தேமுதிக என்னும் கட்சியை தொடங்கிய அவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2011 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார்.

2020-ல் கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போது, அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில், இச்செய்தியை அறிந்த கேப்டன் விஜயகாந்த், கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியை அரசு எடுத்துக் கொள்ளலாம் என நிலத்தை தர முன்வந்தார்.

இப்படி சினிமா, அரசியல் மட்டுமின்றி வள்ளல் மனம் படைத்தவராகவும் விளங்கிய விஜயகாந்தின் மறைவால் அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Post

அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

Posted by - April 2, 2022 0
சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை…

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

Posted by - May 1, 2024 0
ஆவடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.…

நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

Posted by - September 20, 2022 0
“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.