சென்னை அம்பத்தூரில் தேசியக் கொடி அவமதிப்பு

754 0

நீங்கள் காணும் மனதை வேதனை அடையச் செய்யும் இந்த புகைப்படம், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் (86-வது வார்டு) ராமபூர்ணம் நகர் விரிவாக்கம் 4-வது குறுக்குத் தெருவில் எடுக்கப்பட்டது.

இந்திய தேசியக் கொடி சட்டம் 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றின் கீழ், தேசியக் கொடியை எப்படி கையாள்வது என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி தேசியக் கொடியை தரையில் விழ அனுமதிப்பது குற்றமாகும்.

ஆனால், யாரோ சில மூடர்கள் அல்லது சமூக விரோதிகள், பாரதத் தாயை அவமதிக்கும் வகையில் உயிருக்கு நிகராக மதிக்க வேண்டிய தேசியக் கொடியை, இப்படி குப்பையில் வீசிச் சென்றிருப்பது மனதை பிழிவதாக உள்ளது. இந்த மாபாதக செயலை செய்தது அருகேயுள்ள அரசு அலுவலக அதிகாரிகளா அல்லது தனியார் பள்ளி அல்லது தனியார் நிறுவனமா?

சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதே ராமபூர்ணம் நகர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அம்பத்தூர் போலீசார் செய்வார்களா?

தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பார்வைக்கும் இந்த செய்தியை முன்வைக்கிறோம்.

தேசியக் கொடி அவமதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். கூடுதலாக அபராதமும் உண்டு.

சட்டம் தன் கடமையை செய்யட்டும்…! ஊர்குருவி காத்திருக்கிறது…

– புலித்தேவன், செய்தியாளர்

Related Post

விஜய்க்கு எதிராக ரஜினி வாய்ஸ் – பின்னணியில் திமுக…!

Posted by - August 10, 2023 0
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக நமது நிருபர் டிவி இணையதளம் உள்ளிட்ட சில ஊடகங்களில் வெளியான தகவல் ஆளுங்கட்சியை அதிர வைத்துள்ளது. “சட்டமன்றத் தேர்தலில்…

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

ஆவடி மேயர் வாய்ப்பு யாருக்கு தெரியுமா?

Posted by - February 24, 2022 0
சென்னையை அடுத்த ஆவடி பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், முதல் மேயர் வாய்ப்பு யாருக்கு என்பது பரபரப்பாக பேசப்படுகிறது. முதலமைச்சர்…

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

மனிதனை காதலிக்கும் சிட்டுக்குருவிகள்

Posted by - March 20, 2025 0
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eight + sixteen =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.