தண்ணீரில் நெற்பயிர்… கண்ணீரில் விவசாயிகள்…

619 0

தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு, காப்பீடு பதிவு பெற டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

சம்பா, தாளடி பட்டத்துக்கு டெல்டா விவசாயிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தி, காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது, இப்படி அவசரப்படுத்துவது சரியா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை சம்பா பருவ பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதிதான் கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்து.

எனவே, இம்முறையும் பருவ பயிர்களை காப்பீடு செய்ய, டிசம்பர் 15 வரை அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Post

விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

Posted by - August 25, 2022 0
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில், மானாவரி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடந்த 20-ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து, அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பயிற்சி…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!

Posted by - April 6, 2025 0
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால்,…

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Posted by - January 18, 2024 0
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது…

விஜய் ஆண்டனியின் 25வது படம் “சக்தி திருமகன்”

Posted by - February 1, 2025 0
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.