tirupati, darshan, temple, online ticket, darshan ticket, devotees

திருப்பதி கோயிலில் இனி நேரடி இலவச தரிசன டிக்கெட்…

614 0

tirupati, darshan, temple, online ticket, darshan ticket, devoteesதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15-ம் தேதி முதல் நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் கடந்த மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. வரும் 15-ம் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் 15-ம் தேதி முதல் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

திருப்பதி அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக வரும் 16-ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது.

அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகள் சீரமைக்கப்படும். மேலும் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.

Related Post

நல்லாசிரியர் கிரேசியஸ், தி கிரேட்

Posted by - September 7, 2023 0
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

Posted by - January 5, 2025 0
பட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி…

அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா

Posted by - March 17, 2022 0
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA) திருப்பெரும்புதூர் வட்டக் கிளை சார்பில் மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், விழா மேடையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.…

ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

Posted by - June 3, 2023 0
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள்…

சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

Posted by - November 10, 2021 0
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்தலை குறிவைத்து புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.