நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!

100 0

மிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால், குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

அடிதடி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதும் என்பது இப்பகுதிகளில் பெரும் சவாலானதாக இருக்கும். இதனால், தூத்துக்குடி தென் பாகம், சிப்காட் போன்ற காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். தப்பித்தவறி யாரேனும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் வந்துவிட்டால், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இணைந்து சதி செய்து அவர்களை பழிவாங்கும் போக்கு நிலவுகிறது. அப்படித்தான் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன், கடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றார். மேலும், தூத்துக்குடி எஸ்.பி., நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மக்கள் நலனுக்காக துடிப்பாக செயல்பட்டு வந்தார் எஸ்.ஐ. முத்தமிழ் அரசன். உதாரணமாக, சமீபத்தில் ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோது, அந்த பிரச்சனையை திறமையாக கையாண்டு போராட்டத்தை வாபஸ் பெற வைத்ததுடன், அவர்களுக்கு உடனடியாக மண்ணெண்ணெய் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார் முத்தமிழ் அரசன்.

இந்நிலையில், தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆகியோருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துடிப்பான நேரடி ஐபிஎஸ் அதிகாரியான தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சட்டத்தின் வழியில் செயல்பட்ட எஸ்.ஐ. முத்தமிழ் அரசனை மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியமர்த்த வேண்டும் என்பதே தூத்துக்குடி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதி வெல்லட்டும்…! மக்கள் காத்திருக்கிறார்கள்…!!

– நிருபர் நாராயணன்

Related Post

நல்லாசிரியர் கிரேசியஸ், தி கிரேட்

Posted by - September 7, 2023 0
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

ஆதார் – பான் இணைக்க இன்று கடைசி நாள்

Posted by - March 31, 2022 0
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், அதற்கான கடைசி நாள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

கேப்டன் விஜயகாந்த் காலமானார்

Posted by - December 28, 2023 0
நடிகர், அரசியல்வாதி, கல்வியாளர் என்ற வரிசையில் நல்ல மனிதராக மக்களால் கொண்டாடப்பட்ட கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71. மதுரை அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும்…

ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Posted by - December 24, 2023 0
கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு Raindropss Charity Foundation, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், ஆனந்தம் இல்லம் இணைந்து Jingle Bells Be a Santa என்ற உணர்வுப்பூர்வமான…

தேர்தலை புறக்கணிக்க திருச்செந்தூர் மக்கள் முடிவு

Posted by - April 9, 2024 0
திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.