மனிதனை காதலிக்கும் சிட்டுக்குருவிகள்

130 0

ன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அறிவித்தது.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது.

சிட்டுக்குருவிகள் வீடுகளில் கூடு கட்டினால் அதிர்ஷ்டம் வரும் என்பது இன்னும் கிராமத்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. வயல்வெளி, வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி பழக விரும்பும் பறவையாக சிட்டுக்குருவி உள்ளது.

ஊர்குருவி என்று செல்லமாக அழைக்கப்படும் சிட்டுக்குருவிகள் வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்கள், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.

சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டுகள் ஆகும். செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். வீடுகளில் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சிட்டுக்குருவிகளின் ஆயுளை குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

குருவிகளில் தேன் சிட்டு, தூக்கணாங்குருவி, பாக்குச் சிட்டு, வாலாட்டிச் சிட்டு, வானம்பாடி, அடைக்கலாங் குருவி, மொட்டைவால் குருவி என பல வகை உண்டு. அவற்றில் சிட்டுக்குருவி மட்டுமே மனிதனோடு நெருங்கி வாழக்கூடிய செல்லப் பறவையாகும். இந்த பூமியில் சிட்டுக்குருவிகள் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் இளவேனிற் காலத்தில்தான் கூடுகட்ட தொடங்கும்.

நமது வீட்டு முற்றம், மொட்டை மாடிகளில் மரப் பலகையால் ஆன செயற்கை கூட்டை வாங்கி வைத்தால் போதும். அவை தேடி வந்து கூடு கட்டும் வாய்ப்பு உள்ளது. கூடுக்கு அருகில் அவ்வப்போது கம்பு, அரிசி, கோதுமை, திணை போன்ற தானியங்களை வைக்கலாம். இந்த கோடைக் காலத்தில் அகன்ற மண் பாத்திரத்தில் தண்ணீரும் வையுங்கள்.

இந்த பூமியில் பல ஆயிரம் ஆண்டுகள் மனித இனத்தோடு வாழ்ந்த சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாத்து, நம்முடன் என்றென்றும் வாழச் செய்வோம்.

கீச்… கீச்… கீச்…! உங்கள் வீட்டு மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகள் வந்துவிட்ட குரல் கேட்கிறது. போய் பாருங்கள்…!

– நிருபர் நாராயணன்

Related Post

மக்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

Posted by - May 13, 2023 0
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் புகுந்த பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். பாரதி…

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Posted by - January 18, 2024 0
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் தமிழ் திருமணப் பத்திரிகை

Posted by - February 14, 2022 0
தமிழ் காதல்…! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளார். தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள இவர்களது திருமண…

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்…!

Posted by - December 23, 2022 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன. “வாரிசு” படத்திற்கு அரசியல் வாரிசு கொடுத்த நெருக்கடியால், படம் வெளியீடு…

டிஜிட்டல் சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம்: பிரதமர் மோடி

Posted by - October 15, 2022 0
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.