மாதம் 40,000 ரூபாய் EMI கட்டுகிறேன்: சின்னத்திரை நடிகை திவ்யா

689 0

பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாக சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போட்டியாக நடிகர் அர்னவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார்.

கர்ப்பிணியாக உள்ள தன்னை கணவர் வயிற்றில் எட்டி உதைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் நடிகை திவ்யா. மேலும், கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக கணவர் வேலையில்லாமல் இருந்ததாகவும், இதனால் வீட்டுக்கடனுக்கு மாதம் 40,000 ரூபாய் தானே செலுத்தி வந்ததாகவும், அர்னவ் கைச்செலவுக்கு கூட பணம் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார் திவ்யா.

அர்னவ் பெயரில் வீடு வாங்கியுள்ளதாகவும் 25 ஆண்டு கால வீட்டுக் கடனில், இன்னும் 23 ஆண்டுகள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாகவும், நடிகை திவ்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், பல பெண்களுடன் அர்னவ் நெருங்கி பழகி அவர்களிடம் மோசடி செய்வதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டையும் திவ்யா முன்வைத்துள்ளார்.

ஆனால், சக நடிகரான ஈஸ்வர் என்பவரின் தூண்டுதலின் பேரில் தனது மனைவி இவ்வாறு புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார் நடிகர் அர்னவ்.

Related Post

அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை

Posted by - January 23, 2024 0
ஹிந்துக்களின் 500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. புன்னகை தவழும் குழந்தை ராமர் சிலை…

பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படம்

Posted by - August 16, 2022 0
பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் கணேசமூர்த்தி இணைந்துள்ள இதன்…

டெஸ்ட் – சினிமா விமர்சனம்

Posted by - April 5, 2025 0
ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சஷிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தண்ணீரில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது திட்டத்தை வெற்றி…

இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

Posted by - November 16, 2022 0
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில்…

அம்பத்தூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 22, 2022 0
அம்பத்தூர் மதுவிலக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள்கிழமை அன்று அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போதைப்பொருள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.