சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

710 0

2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தேர்தலை குறிவைத்து புதிய சென்ட் அறிமுகம்சமாஜ்வாடி அத்தர்‘ என்று அழைக்கப்படும் இந்த வாசனை திரவியத்தின் அட்டைப் பெட்டியில் அகிலேஷ் யாதவ் படத்துடன், கட்சியின் சைக்கிள் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவிய பாட்டிலில் உள்ள ஆலிவ் பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்கள் சமாஜ்வாடி கட்சியின் கொடியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

இந்த வாசனை அனைவருக்கும் சொந்தமானது. இதனை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் சோசலிச சிந்தனையுடன் மணம் வீசுவார்கள். இந்த வாசனை திரவியம் 2022-ல் வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவரும். இந்த வாசனை தேர்தலில் மாயாஜாலம் நிகழ்த்தும். ஆனால் பொய்யின் மூலம் மலர்ந்த மலர் ஒருபோதும் நறுமணத்தைத் தராது” என தெரிவித்தார்.

அகிலேஷ் அறிமுகப்படுத்திய சென்ட் குறித்த செய்தி டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வாசனை திரவியம் குறித்த தகவலை, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வேகமாக பகிர்ந்து செய்து வருகின்றனர்.

இதனிடையே, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, அனைவருக்கும் சென்ட் கொடுத்து பொதுமக்களை கவர அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Posted by - January 18, 2024 0
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது…

ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்

Posted by - October 6, 2022 0
ஐ.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம்…

ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

Posted by - February 6, 2022 0
ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின்…

அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா

Posted by - March 17, 2022 0
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA) திருப்பெரும்புதூர் வட்டக் கிளை சார்பில் மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், விழா மேடையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

19 − five =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.