ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்

1029 0

.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் நடுவே, சிறிய நாடுகளுக்கான மாநாடும் நடைபெற்றது. இதில் கைலாசா நாட்டின் பிரதிநிதியாக நித்தியானந்தாவின் சிஷ்யை விஜயபிரியா என்பவர் பங்கேற்றுள்ளார்.

ஆப்ரிக்கா மற்றும் கரிபீயன் பகுதியில் ஏராளமான குட்டி நாடுகள் உள்ள நிலையில், அவற்றின் பிரதிநிதிகளை, ஐ.நா. மாநாட்டில், கைலாசாவின் பெண் தூதர் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ருத்ராட்சை அணிந்து ஜடாமுடியுடன் காணப்படும் விஜயபிரியா, தனது கையில் சாமியார் நித்தியானந்தாவின் உருவத்தையும் பச்சை குத்தியுள்ளார். ஐ.நா.வில் பிற நாட்டு பிரதிதிகளுக்கு அவர் நித்தியானந்தா தொடர்பான புத்தகத்தை பரிசளித்தார்.

தற்போது உடல்நலம் தேறியுள்ள கைலாசா அதிபர் நித்தியானந்தா, தனது நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார். அந்தவகையில், ஐ.நா.வில் அவருக்கு இதுவொரு சிறிய வெற்றி என்றே கூறலாம்.

 

Related Post

பரபரப்பாக விற்பனை ஆகும் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்

Posted by - January 17, 2024 0
நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்…

10 கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2022 0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையில் உள்ள…

காதல், நகைச்சுவை கலந்த ‘ஹார்ட்டின்’

Posted by - February 16, 2025 0
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’ துடிப்புமிக்க இளம் திறமைகளை…

ஆவடி உதவி ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 23, 2022 0
ஆவடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன்,…

உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

Posted by - December 2, 2024 0
சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல்துறைப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

one + eight =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.