ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்

1081 0

.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் நடுவே, சிறிய நாடுகளுக்கான மாநாடும் நடைபெற்றது. இதில் கைலாசா நாட்டின் பிரதிநிதியாக நித்தியானந்தாவின் சிஷ்யை விஜயபிரியா என்பவர் பங்கேற்றுள்ளார்.

ஆப்ரிக்கா மற்றும் கரிபீயன் பகுதியில் ஏராளமான குட்டி நாடுகள் உள்ள நிலையில், அவற்றின் பிரதிநிதிகளை, ஐ.நா. மாநாட்டில், கைலாசாவின் பெண் தூதர் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ருத்ராட்சை அணிந்து ஜடாமுடியுடன் காணப்படும் விஜயபிரியா, தனது கையில் சாமியார் நித்தியானந்தாவின் உருவத்தையும் பச்சை குத்தியுள்ளார். ஐ.நா.வில் பிற நாட்டு பிரதிதிகளுக்கு அவர் நித்தியானந்தா தொடர்பான புத்தகத்தை பரிசளித்தார்.

தற்போது உடல்நலம் தேறியுள்ள கைலாசா அதிபர் நித்தியானந்தா, தனது நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார். அந்தவகையில், ஐ.நா.வில் அவருக்கு இதுவொரு சிறிய வெற்றி என்றே கூறலாம்.

 

Related Post

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்…!

Posted by - December 23, 2022 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன. “வாரிசு” படத்திற்கு அரசியல் வாரிசு கொடுத்த நெருக்கடியால், படம் வெளியீடு…

நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

Posted by - September 20, 2022 0
“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

வருணன் – சினிமா விமர்சனம்

Posted by - March 15, 2025 0
ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’. ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும்…

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

Posted by - January 5, 2025 0
பட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி…

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா

Posted by - November 9, 2021 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.