சென்னை அம்பத்தூரில் தேசியக் கொடி அவமதிப்பு

826 0

நீங்கள் காணும் மனதை வேதனை அடையச் செய்யும் இந்த புகைப்படம், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் (86-வது வார்டு) ராமபூர்ணம் நகர் விரிவாக்கம் 4-வது குறுக்குத் தெருவில் எடுக்கப்பட்டது.

இந்திய தேசியக் கொடி சட்டம் 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றின் கீழ், தேசியக் கொடியை எப்படி கையாள்வது என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி தேசியக் கொடியை தரையில் விழ அனுமதிப்பது குற்றமாகும்.

ஆனால், யாரோ சில மூடர்கள் அல்லது சமூக விரோதிகள், பாரதத் தாயை அவமதிக்கும் வகையில் உயிருக்கு நிகராக மதிக்க வேண்டிய தேசியக் கொடியை, இப்படி குப்பையில் வீசிச் சென்றிருப்பது மனதை பிழிவதாக உள்ளது. இந்த மாபாதக செயலை செய்தது அருகேயுள்ள அரசு அலுவலக அதிகாரிகளா அல்லது தனியார் பள்ளி அல்லது தனியார் நிறுவனமா?

சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதே ராமபூர்ணம் நகர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அம்பத்தூர் போலீசார் செய்வார்களா?

தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பார்வைக்கும் இந்த செய்தியை முன்வைக்கிறோம்.

தேசியக் கொடி அவமதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். கூடுதலாக அபராதமும் உண்டு.

சட்டம் தன் கடமையை செய்யட்டும்…! ஊர்குருவி காத்திருக்கிறது…

– புலித்தேவன், செய்தியாளர்

Related Post

கிளாம்பாக்கத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா – 4

Posted by - June 8, 2025 0
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். ஞாயிற்றுக்கிழமை என்பதால், பயணிகள் பரபரப்பாக சொந்த ஊர் செல்லும் பேருந்தை நோக்கிச் ஓடிச் சென்றனர். சென்னை வந்தவர்கள் மாநகரப் பேருந்துகளில் போட்டி…

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

டுவிட்டர் டிரெண்டிங் – மிரண்டுபோன TNPSC

Posted by - March 9, 2023 0
சோசியல் மீடியாவில் தேர்வர்கள் போட்டுத் தாக்கியதில், மிரண்டுபோன TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஒருவழியாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 397 கிராம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.