திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்தை உடைத்து, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தைப் படைத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சி. ஜோசப் விஜய் இன்று தமது 52-வது பிறந்தநாளை முதல்முறையாக ‘முதலமைச்சர்’ என்ற அந்தஸ்துடன் கொண்டாடவுள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவின் மகனாக 1974-ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்தார் விஜய். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த விஜய் அதன் பின்னர், தனது தந்தையின்டைரக்ஷனில் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார்.
2024-ல் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியைத் தொடங்கி, தனது 69-வது படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொன்னார் விஜய். 2026 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு 2026 மே 10 அன்று தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
பதவியேற்ற சில வாரங்களிலேயே வரும் அவரது முதல் பிறந்தநாள் என்பதால், இது அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு நடிகர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி முதலமைச்சர் ஆக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார், கப்பு முக்கியம் பிகிலு என சொன்னது போலவே கப்பை ஜெயித்துக் காட்டியுள்ளார் விஜய்.
#HBDVijay உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. முதலமைச்சர் விஜயக்கு பிரதமர் மோடி, வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நிருபர் டி.வி. மற்றும் நிருபர் டைமஸ் சார்பில் முதலமைச்சருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
– நிருபர் நாராயணன்
