நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி.யின் செய்தியாளரும் சமூக ஆர்வலருமான புலித்தேவன் – சந்திரகலா தம்பதியினர் தங்களது 30-ம் ஆண்டு திருமண நாளை இன்று (19.08.2026) மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
சிவகங்கை சீமையின் மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த புலித்தேவன், முல்லைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகலா ஆகியோர் இல்லற வாழ்வில் இணைந்து இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. இவர்கள், சென்னை அம்பத்தூரில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் திருமண நாளையொட்டி நிருபர் டைம்ஸ் வார இதழ் மற்றும் நிருபர் டி.வி.யின் தலைமை செய்தியாளர் “தம்பி” நாராயணன் – அமலா தம்பதியினர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜித்குமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இனிய திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புலித்தேவன் – சந்திரகலா தம்பதியினருக்கு அவர்களது மகன் “லிட்டில் மாஸ்டர்” மகிழ் மித்ரன் மகிழ்வுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார். நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி. சார்பிலும் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
– நிருபர் நாராயணன்
