“தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யை (TNCJP) பிராந்திய அரசியல் அமைப்பாக பதிவு செய்யக் கோரி சென்னையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பிரம்ம பாலசுப்பிரமணியம் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளார்.
தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரும் தலைவருமான பிரம்ம பாலசுப்பிரமணியம் கூறுகையில், தனது அரசியல் அமைப்பு அபிஜித் திப்கேயின் இணைய இயக்கத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பிரம்ம பாலசுப்பிரமணியம் தனது கட்சி நிர்வாகி ஜனார்த்தனன் மற்றும் செய்தித் தொடர்பாளர் சிவகுமாருடன் செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்றார்.
ஜூன் 6-ம் தேதி தனது கட்சி பதிவுக்கு விண்ணப்பித்த நிலையில், தேர்தல் ஆணையம் கட்சியின் செயல்பாட்டை புரிந்துகொள்ள நேர்காணலுக்கு தங்களை அழைத்தது என்று பிரம்ம பாலசுப்பிரமணியம் கூறினார். தமிழகத்தில் சமூக நீதிக்காக எங்கள் கட்சி பாடுபடும் என்று நாங்கள் அவர்களிடம் கூறியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கும் அதன் நிறுவனர் திரு. பிரம்ம பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் நிருபர் டிவி மற்றும் நிருபர் டைம்ஸ் பத்திரிகை சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
“தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” தேர்தலிலும் மக்கள் இதயங்களிலும் வெற்றி வாகை சூடட்டும்.
– நிருபர் நாராயணன்
