ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

883 0

ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இச்சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என கூறினார்.

இவ்விழாவில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது :

உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வணக்கங்கள் . ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றது எனது பாக்கியம். வசந்த பஞ்சமி தினத்தில் ராமானுஜர் திறப்பு விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானது. இந்த சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு கூறும் . ராமானுஜரின் இந்த உருவச்சிலை மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கட்டும்.

சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர். தமிழில் பல முக்கியமான படைப்புகளை ராமானுஜர் அருளி இருக்கிறார். சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களையும் வளர்த்துள்ளார். ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு.

உலகின் மிக பழமையான நாகரிகம் கொண்ட நாடு இந்தியா. நமது கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ராமானுஜரின் போதனைகள் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Post

ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்

Posted by - October 6, 2022 0
ஐ.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம்…

உலகளவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் இந்தியா

Posted by - November 13, 2021 0
இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார முன்னேற்றத்தில் தனியாரின் பங்களிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் மாநில நிதி…

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா

Posted by - November 9, 2021 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும்…

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை சுட்ட சிங்கப்பெண்

Posted by - July 31, 2024 0
இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார். விண்வெளி ஆய்வு,…

நெருப்பாக இருப்போம், இலக்கை அடைவோம்: விஜய்

Posted by - October 27, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குழந்தைகள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.