தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

582 0

மிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அப்போது திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசிபெற்றார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் சோழர் மன்னர்களின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:

புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியாவை உலக நாடுகள் இன்று நன்மதிப்போடு பார்க்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது.

செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகார மாற்றத்துக்கான அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது. 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது.

மக்களவையில் புனிதமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நீதி, நேர்மை, தேசப்பற்று ஆகியவற்றை பிரதிபலிக்கும்.

சோழர் மரபிலிருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. செங்கோலை வழங்கிய ஆதீனங்களின் முன்பு தலை வணங்குகிறேன். செங்கோலின் கௌரவத்தை மீண்டும் பறைசாற்றுவோம்.

புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை உயர உள்ளதை கருத்தில் கொண்டே இந்த பிரம்மாண்ட கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயிலாக விளங்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் தீரா முயற்சியால் பிரம்மாண்டமாக எழுந்திருக்கும் புதிய நாடாளுமன்றம், அடுத்து நாம் உலக நாடுகளுக்கு தலைமை தாங்கப் போகும் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

செல்லும் திசையெல்லாம் தமிழ், தமிழர் புகழ் பரப்பும் பிரதமர் மோடி, சோழ மன்னர்களின் புதிய அவதாரம் என்றே கூறலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

Posted by - November 16, 2022 0
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில்…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

நல்லாசிரியர் கிரேசியஸ், தி கிரேட்

Posted by - September 7, 2023 0
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்

Posted by - October 6, 2022 0
ஐ.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

one × three =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.