தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

723 0

மிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அப்போது திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசிபெற்றார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் சோழர் மன்னர்களின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:

புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியாவை உலக நாடுகள் இன்று நன்மதிப்போடு பார்க்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது.

செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகார மாற்றத்துக்கான அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது. 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது.

மக்களவையில் புனிதமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நீதி, நேர்மை, தேசப்பற்று ஆகியவற்றை பிரதிபலிக்கும்.

சோழர் மரபிலிருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. செங்கோலை வழங்கிய ஆதீனங்களின் முன்பு தலை வணங்குகிறேன். செங்கோலின் கௌரவத்தை மீண்டும் பறைசாற்றுவோம்.

புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை உயர உள்ளதை கருத்தில் கொண்டே இந்த பிரம்மாண்ட கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயிலாக விளங்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் தீரா முயற்சியால் பிரம்மாண்டமாக எழுந்திருக்கும் புதிய நாடாளுமன்றம், அடுத்து நாம் உலக நாடுகளுக்கு தலைமை தாங்கப் போகும் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

செல்லும் திசையெல்லாம் தமிழ், தமிழர் புகழ் பரப்பும் பிரதமர் மோடி, சோழ மன்னர்களின் புதிய அவதாரம் என்றே கூறலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

டுவிட்டர் டிரெண்டிங் – மிரண்டுபோன TNPSC

Posted by - March 9, 2023 0
சோசியல் மீடியாவில் தேர்வர்கள் போட்டுத் தாக்கியதில், மிரண்டுபோன TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஒருவழியாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 397 கிராம…

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்…!

Posted by - December 23, 2022 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன. “வாரிசு” படத்திற்கு அரசியல் வாரிசு கொடுத்த நெருக்கடியால், படம் வெளியீடு…

ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

Posted by - June 3, 2023 0
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள்…

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் நிகில் முருகன்

Posted by - August 26, 2025 0
கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

four + 9 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.