ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

771 0

டிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

130 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதில் நிகழ்ந்த குளறுபடியே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டு, திடீரென ரெட் சிக்னல் கொடுக்கப்பட்ட நிலையில், புயல் வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை, ஓட்டுநரால் உடனடியாக நிறுத்த முடியாமல் போய்விட்டது.

இதனால் எதிரே வந்த சரக்கு ரயில் மீது அசுர வேகத்தில் மோதியதில் மொத்தம் உள்ள 23 பெட்டிகளில் 21 பெட்டிகள் கவிழ்ந்தன. அதன் என்ஜின் சரக்கு ரயில் மீது ஏறி நின்றது என்றால், விபத்தின் கோரத்தை புரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் ரயில் மீது மோதியது.

ஒருசில நொடிகளில் அங்கே மக்களின் அலறல் சத்தம் எழுந்த நிலையில், ஏராளமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை 294 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 56 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தவறுக்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனையில் இருந்து தப்ப முடியாது என சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி தெரிவித்தார்.

கவாச் என்ற ரயில் மோதல் தடுப்பு கருவி அந்த பகுதியில் இல்லாததும் விபத்திற்கு காரணமாகி விட்டது. இதனிடையே உயிரிழந்தோருக்காக நாடு முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நிருபர் டிவி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Post

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Posted by - December 2, 2024 0
மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் திரு.எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன்…

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா

Posted by - November 9, 2021 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும்…

மாலத்தீவும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்…!

Posted by - January 12, 2024 0
பிரதமர் மோடி சமீபத்தில் நம் நாட்டின் யூனியன் பிரதேசமான அழகு ததும்பும் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நடைப்பயிற்சி மற்றும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்ட பிரதமர் அதுதொடர்பான…

நல்லாசிரியர் கிரேசியஸ், தி கிரேட்

Posted by - September 7, 2023 0
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.