ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

959 0

டிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

130 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதில் நிகழ்ந்த குளறுபடியே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டு, திடீரென ரெட் சிக்னல் கொடுக்கப்பட்ட நிலையில், புயல் வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை, ஓட்டுநரால் உடனடியாக நிறுத்த முடியாமல் போய்விட்டது.

இதனால் எதிரே வந்த சரக்கு ரயில் மீது அசுர வேகத்தில் மோதியதில் மொத்தம் உள்ள 23 பெட்டிகளில் 21 பெட்டிகள் கவிழ்ந்தன. அதன் என்ஜின் சரக்கு ரயில் மீது ஏறி நின்றது என்றால், விபத்தின் கோரத்தை புரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் ரயில் மீது மோதியது.

ஒருசில நொடிகளில் அங்கே மக்களின் அலறல் சத்தம் எழுந்த நிலையில், ஏராளமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை 294 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 56 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தவறுக்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனையில் இருந்து தப்ப முடியாது என சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி தெரிவித்தார்.

கவாச் என்ற ரயில் மோதல் தடுப்பு கருவி அந்த பகுதியில் இல்லாததும் விபத்திற்கு காரணமாகி விட்டது. இதனிடையே உயிரிழந்தோருக்காக நாடு முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நிருபர் டிவி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Post

அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை

Posted by - January 23, 2024 0
ஹிந்துக்களின் 500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. புன்னகை தவழும் குழந்தை ராமர் சிலை…

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்

Posted by - March 1, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு…

வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த ஆதி குணசேகரன்

Posted by - September 9, 2023 0
சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது…

உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

Posted by - December 2, 2024 0
சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல்துறைப்…

‘கூகுள்’ மீது இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அதிரடி புகார்

Posted by - March 26, 2022 0
காசு தராமல் ஓசியில் செய்தி கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.