மாலத்தீவும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்…!

628 0

பிரதமர் மோடி சமீபத்தில் நம் நாட்டின் யூனியன் பிரதேசமான அழகு ததும்பும் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நடைப்பயிற்சி மற்றும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்ட பிரதமர் அதுதொடர்பான புகைப்படங்களை டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், “அழகும் அமைதியும் தவழும் லட்சத்தீவு மனதை மயக்கும் இடமாக விளங்குகிறது. சாகசத்தை விரும்புவர்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம்பெற வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் குட்டி நாடான மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை பிரதமர் மோடி ஊக்குவிப்பதாக கருத்து பரவியது. இதையடுத்து, இந்தியாவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து அந்நாட்டு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகிய மூவரும் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டனர். மரியம் ஷியுனா பிரதமர் மோடியை மிகவும் மரியாதை குறைவாக விமர்சித்திருந்தார்.

மாலத்தீவு ஆளுங்கட்சி மூத்த தலைவரான ஜாகித் ரமீஸ், “சுற்றுலாத்துறையில் எங்களுடன் போட்டியிட முடியுமா?, இந்தியர்களால் சுத்தத்தை பேண முடியுமா?, சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் அறைகளின் துர்நாற்றமே, இந்திய சுற்றுலாத்துறையை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும்” என்று மிகவும் கேலியாக விமர்சித்திருந்தார்.

இதனால், கொந்தளித்துப் போன நமது அரசியல், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலா பயணத்திற்கான விமான மற்றும் ஓட்டல் முன்பதிவை ரத்து செய்யத் தொடங்கினர்.

இதனால், பீதியடைந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சர்ச்சை கருத்து தெரிவித்த 3 அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். எனினும், சீன ஆதரவாளரான முகமது முய்சுவின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என்றே கூறப்படுகிறது.

மாலத்தீவின் பாதுகாப்பு, கடல் வளம், கல்வி, சுற்றுலா என அனைத்திலும் இந்தியாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். ஆனால், தற்போது சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து இந்தியாவுக்கு எதிரான வேலைகளில் முனைப்பு காட்டுகிறது மாலத்தீவு.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கூறுவது போல், மாலத்தீவின் பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவதே வழக்கம். மேலும், அங்கு இந்திய ராணுவத்தின் குழு எப்போதும் இருக்கும். இவற்றை தற்போது வாபஸ் பெற கோருகிறார் புதிய அதிபர்.

பிரதமர் மோடியின் தலைமையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள இந்தியாவுடன், பூமிவெப்பமயமாதல் பிரச்சனையில் கடலில் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி நாடு மோதுவது பெரும் நகைப்பை தருவதாக உள்ளது. இதன் பின்னணியில் அடக்குமுறை சித்தாந்தத்தை கையாளும் சீனா இருப்பதால், வழக்கம் போல் இங்குள்ள கம்யூனிஸ்ட் மேதாவிகள் பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.

அனைத்து வளங்களும் கொண்ட நம் நாட்டில், கிரிக்கெட் வீரர் டோனி குறிப்பிட்டது போல, நாம் காண வேண்டிய அழகான சுற்றுலா தலங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக கண்டு ரசிக்கவே நமது ஆயுள்காலம் போதாது என்பதே உண்மை.

எதற்கெடுத்தாலம் வெளிநாட்டை உயர்த்திப் பேசி, பீற்றிக் கொள்ளும் பழக்கத்தை முதலில் இந்தியர்கள் கைவிட வேண்டும்.

மாலத்தீவும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம். லட்சத்தீவை கொண்டாடுவோம்.

ஜெய்ஹிந்த்!

– நிருபர் நாராயணன்

Related Post

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Posted by - January 18, 2024 0
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது…

அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

Posted by - April 2, 2022 0
சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 3

Posted by - May 20, 2025 0
சென்னை மெரீனா பீச். தள்ளுவண்டியில் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா. “அழகு அண்ணே…!” என கூவியபடி வந்தார் கிசு கிசு கோவாலு.…

அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா

Posted by - March 17, 2022 0
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA) திருப்பெரும்புதூர் வட்டக் கிளை சார்பில் மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், விழா மேடையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

10 + nineteen =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.