தண்ணீரில் நெற்பயிர்… கண்ணீரில் விவசாயிகள்…

686 0

தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு, காப்பீடு பதிவு பெற டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

சம்பா, தாளடி பட்டத்துக்கு டெல்டா விவசாயிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தி, காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது, இப்படி அவசரப்படுத்துவது சரியா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை சம்பா பருவ பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதிதான் கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்து.

எனவே, இம்முறையும் பருவ பயிர்களை காப்பீடு செய்ய, டிசம்பர் 15 வரை அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Post

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Posted by - January 18, 2024 0
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது…

காதல், நகைச்சுவை கலந்த ‘ஹார்ட்டின்’

Posted by - February 16, 2025 0
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’ துடிப்புமிக்க இளம் திறமைகளை…

மனிதனை காதலிக்கும் சிட்டுக்குருவிகள்

Posted by - March 20, 2025 0
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக…

அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா

Posted by - March 17, 2022 0
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA) திருப்பெரும்புதூர் வட்டக் கிளை சார்பில் மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், விழா மேடையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 7 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.