படவா – சினிமா விமர்சனம்

300 0

தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறது. இதை பயன்படுத்தி செங்கல் சூளை அமைத்து ஊர் மக்கள் மூலம் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார் கேஜிஎப். ராம்.

விமலும், சூரியும் வெட்டியாக ஊர் சுற்றி வர, அட்டகாசம் தாங்க முடியாமல் ஊரே செலவு செய்து விமலை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறது. அங்கு அவருக்கு வேலை பறிபோய் விடுகிறது.

விமலை மீண்டும் கிராமத்தினர் ஏற்கும் வகையில், அவருக்கு லாட்டரியில் 10 கோடி ரூபாய் விழுந்துள்ளதாக நண்பன் பொய்யை பரப்புகிறான். மரக்காத்தூர் மக்களும் அதை நம்பி அவருக்கு அவரை ஊராட்சி மன்ற தலைவராக ஆக்கி அழகு பார்க்கின்றனர். நடுவே காதலும் சேர்ந்து கொள்ள, நம் கதாநாயகன் அந்த கிராமத்தை எப்படி மாற்றுகிறார் என்பதை கலகலப்பாக கூறியிருக்கிறார்கள்.

விமல் படம் என்றாலே ரசித்து, சிரித்துப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை பொய்யாகவில்லை. சும்மா வெளுத்து வாங்கியிருக்கிறார். அவருக்கு நிகராக அண்ணன் சூரி நடிப்பும் அருமை. படத்திற்கு இவர்களின் கூட்டணி பெரிய பலம்.

கதாநாயகி ஸ்ரீதா அழகு தேவதையாக ஜொலிக்கிறார். பாடல்களிலும் ரசிக்க வைத்திருக்கிறார். வில்லனாக வரும் கேஜிஎப்.ராம் கச்சிதமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

தேவதர்ஷினி, நமோ நாராயணன், விநோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், அதற்கு உறுதுணையாக ஜான் பீட்டரின் பின்னணி இசையும் கிராமத்துக் கதையில் மண்வாசம் வீசச் செய்திருக்கிறது. “கொட்டுதே வானம்” பாடல் வரிகள் அருமை.

கருவேல மரங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வரை சென்று பலரும் போராடி இருக்கிறார்கள். இந்த படத்தில் அந்த மரங்கள் விவசாயத்திற்கு எப்படி கேடு விளைவிக்கிறது என மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அழிந்து வரும் வேளாண்மையை தாங்கிப் பிடிக்கும் வகையில் இப்படத்தை நேர்த்தியாக கையாண்டுள்ள இயக்குநர் நந்தாவுக்கு பாராட்டுகள்.

“படவா” விவசாயம் குறித்த ஒரு பாடம். இது ரசிகர்களையும் வெல்லும், விருதையும் வெல்லும்.

– நிருபர் நாராயணன்

Related Post

“பவுடர்” – திரைப்பட விமர்சனம்

Posted by - November 30, 2022 0
உலகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்”…

தேர்தலை புறக்கணிக்க திருச்செந்தூர் மக்கள் முடிவு

Posted by - April 9, 2024 0
திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித…

இன்பினிட்டி – திரை விமர்சனம்

Posted by - July 8, 2023 0
நகரில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, படத்தின் தலைப்புக்கு ஏற்ப முடிவற்ற தன்மையாக தொடர்ந்து சில விஐபிகளும் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்க வரும்…

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

அழகான பொண்ணும் குண்டு பையனும்…!

Posted by - September 8, 2022 0
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் திருப்பதியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eleven − eleven =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.