வருணன் – சினிமா விமர்சனம்

443 0

ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’.

ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

யாக்கை பிலிம்ஸ் மற்றும் வான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

வட சென்னையின் ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரு வணிகர்களுக்கு இடையே தொழில் போட்டி நிலவுகிறது. உரிமையாளர்களிடம் மோதல் போக்கு இல்லாவிட்டாலும், ஊழியர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள். அதேநேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சி செய்கிறார். அவரது பேராசையால் இரு தரப்பினரின் தொழில் போட்டி பகையாக மாறுகிறது. இதனால், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துச் சொல்வதே ‘வருணன்’.

மினரல் வாட்டர் கேன் நிறுவனம் நடத்தும் ராதாரவி மற்றும் சரண்ராஜ் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

ஹீரோ துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் கதாநாயகி நடித்திருக்கும் சின்னத்திரை புகழ் கேப்ரில்லா ஆகியோர் அருமையான நடிப்பை தந்திருக்கிறார்கள். கேப்ரில்லா வெள்ளித்திரையிலும் இனி தனி முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கலாம்.

பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடியும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் ஒலிக்கும் நடிகர் சத்யராஜின் கம்பீரக் குரல் படத்தை மெருகேற்றும் விதமாக உள்ளது. நல்ல ஐடியா…!

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷின் கேமரா சும்மா சுழன்று சுழன்று காட்சிகளை படம்பிடித்துள்ளது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கிய விதம் அற்புதம். போபோ சஷியின் பின்னணி இசை கேமராவுடன் இணைந்து பயணத்திருக்கிறது என்றே கூறலாம். வாவ்…!

உலகின் மிக அத்தியாவசிப் பொருளான தண்ணீர் மற்றும் அதன் பின்னால் உள்ள வணிகம் மற்றும் அரசியலை பேசுகிறது வருணன். நல்லதொரு கருத்தை மக்களிடம் கொண்டுச் செல்ல முயன்றதற்காகவே இயக்குநர் ஜெயவேல் முருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மக்களுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ரசிகர்களுக்கு “வருணன்” முக்கியம். கோடை வெயிலுக்கு இதமாக கண்டு ரசிக்கலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

ஆன்மிக சேவையில் முனைவர் திருச்செங்கோடு திருநாவுக்கரசு

Posted by - November 8, 2025 0
உலகப் புகழ்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு தொன்மை வாய்ந்த கோயில்கள் குறித்து ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் திருநாவுக்கரசு. தமிழ்நாட்டின் அனைத்து…

அகாலி – சினிமா விமர்சனம்

Posted by - June 1, 2024 0
அகாலி என்பது பஞ்சாபில் பேசப்படும் ஒரு வட்டார மொழி. இதற்கு இறப்பு என்பதே இல்லாத மனிதன் என்று அர்த்தம். அந்த தலைப்பில் வெளிவந்திருக்கும் படமும் பரபரப்பான ஒரு…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜேம்ஸ் இல்லத் திருமண விழா

Posted by - February 24, 2022 0
புகைப்படம்: புலித்தேவன் சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.