ஆவடி உதவி ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

772 0

வடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன், திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களை வரவேற்று பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. சாலமன் பேசினார்.

இதையடுத்து மாணவர்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளும், உதவி தலைமை ஆசிரியரும் எடுத்துரைத்தனர். பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியை காவல்துறை உதவி ஆணையர் திரு புருஷோத்தமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய மாணவர்களின் இந்த பிரச்சாரப் பேரணி, டிஎன்எச்பி ரோடு வழியாக மீண்டும் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தது. சுமார் 2 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

காவல்துறை அதிகாரிகளின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அயப்பாக்கம் பகுதி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

–  ஆர். நாராயணன்

 

Related Post

ரஜினியின் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியீடு

Posted by - February 11, 2022 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர்…

நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

Posted by - September 20, 2022 0
“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

மனிதனை காதலிக்கும் சிட்டுக்குருவிகள்

Posted by - March 20, 2025 0
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக…

அம்பத்தூரில் டாஸ்மாக் பார் ஆக மாறிய நடைபாதை

Posted by - June 30, 2023 0
சென்னையில் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மாலை நேரங்களில் அருகேயுள்ள நடைபாதையே பாராக இயங்கி வருகின்றன. இது குடிமகன்களுக்கு குஷியாக…

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.