ஆவடி உதவி ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

865 0

வடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன், திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களை வரவேற்று பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. சாலமன் பேசினார்.

இதையடுத்து மாணவர்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளும், உதவி தலைமை ஆசிரியரும் எடுத்துரைத்தனர். பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியை காவல்துறை உதவி ஆணையர் திரு புருஷோத்தமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய மாணவர்களின் இந்த பிரச்சாரப் பேரணி, டிஎன்எச்பி ரோடு வழியாக மீண்டும் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தது. சுமார் 2 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

காவல்துறை அதிகாரிகளின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அயப்பாக்கம் பகுதி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

–  ஆர். நாராயணன்

 

Related Post

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Posted by - December 24, 2023 0
கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு Raindropss Charity Foundation, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், ஆனந்தம் இல்லம் இணைந்து Jingle Bells Be a Santa என்ற உணர்வுப்பூர்வமான…

ஆதார் – பான் இணைக்க இன்று கடைசி நாள்

Posted by - March 31, 2022 0
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், அதற்கான கடைசி நாள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

தேர்தலை புறக்கணிக்க திருச்செந்தூர் மக்கள் முடிவு

Posted by - April 9, 2024 0
திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித…

சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

Posted by - November 10, 2021 0
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்தலை குறிவைத்து புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

10 − four =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.