ஆவடி உதவி ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

915 0

வடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன், திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களை வரவேற்று பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. சாலமன் பேசினார்.

இதையடுத்து மாணவர்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளும், உதவி தலைமை ஆசிரியரும் எடுத்துரைத்தனர். பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியை காவல்துறை உதவி ஆணையர் திரு புருஷோத்தமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய மாணவர்களின் இந்த பிரச்சாரப் பேரணி, டிஎன்எச்பி ரோடு வழியாக மீண்டும் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தது. சுமார் 2 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

காவல்துறை அதிகாரிகளின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அயப்பாக்கம் பகுதி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

–  ஆர். நாராயணன்

 

Related Post

‘கூகுள்’ மீது இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அதிரடி புகார்

Posted by - March 26, 2022 0
காசு தராமல் ஓசியில் செய்தி கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு

Posted by - October 13, 2022 0
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற…

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்

Posted by - March 1, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு…

நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!

Posted by - April 6, 2025 0
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.