அம்பத்தூரில் குட்கா பறிமுதல்

634 0

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு குடோனில் இருந்து ரெட்ஹில்ஸ் அருகேயுள்ள சூரப்பட்டிற்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் மற்றும் 850 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா கடத்தலுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் செயல்படும் குடோன்களில் குட்கா பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம், குட்கா கடத்தல்காரர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருட்களால் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், 850 கிலோ குட்காவை அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

– நிருபர் நாராயணன்

Related Post

எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்: அனிதா ராதாகிருஷ்ணன்

Posted by - July 4, 2026 0
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் (BNS 352), அரசு…

ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

Posted by - June 3, 2023 0
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள்…

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

Posted by - November 16, 2022 0
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில்…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.