அம்பத்தூரில் குட்கா பறிமுதல்

555 0

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு குடோனில் இருந்து ரெட்ஹில்ஸ் அருகேயுள்ள சூரப்பட்டிற்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் மற்றும் 850 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா கடத்தலுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் செயல்படும் குடோன்களில் குட்கா பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம், குட்கா கடத்தல்காரர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருட்களால் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், 850 கிலோ குட்காவை அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

– நிருபர் நாராயணன்

Related Post

போட்டித் தேர்வுகளில் சாதனை படைத்த வீரமங்கை

Posted by - November 8, 2025 0
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற மாணவி, 5 அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தந்தை சரவணன் ஆட்டோ ஓட்டுநர்,…

சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

Posted by - November 10, 2021 0
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்தலை குறிவைத்து புதிய…

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

மக்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

Posted by - May 13, 2023 0
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் புகுந்த பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். பாரதி…

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.