அம்பத்தூரில் குட்கா பறிமுதல்

466 0

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு குடோனில் இருந்து ரெட்ஹில்ஸ் அருகேயுள்ள சூரப்பட்டிற்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் மற்றும் 850 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா கடத்தலுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் செயல்படும் குடோன்களில் குட்கா பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம், குட்கா கடத்தல்காரர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருட்களால் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், 850 கிலோ குட்காவை அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

– நிருபர் நாராயணன்

Related Post

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

சின்னத்திரை தொகுப்பாளர் நடிகை ரம்யாவின் புத்தகம் வெளியீடு

Posted by - January 21, 2023 0
பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் எழுதிய ‘Stop Weighting’ புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம்…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

Posted by - May 1, 2024 0
ஆவடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.…

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜேம்ஸ் இல்லத் திருமண விழா

Posted by - February 24, 2022 0
புகைப்படம்: புலித்தேவன் சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.