லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

641 0

வடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே பணியிலிருந்த திருவள்ளுரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் பணிமூப்பு அடிப்படையில் ஓய்வு பெற்று சென்றுவிட்ட பிறகு வேறு யாரும் புதிதாக பணி அமர்த்தப்படவில்லை. அதனால் காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரை அவசர மருத்துவ உதவிக்கு தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனை ஆய்வகத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருப்பதால் அவை அனைக்கும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது இரண்டு அரசு மருத்துவர்கள் பணியில் உள்ளனர். ஆனால் போதிய பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை.

இரவிலும் மருத்துவ சேவை கிடைப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்குக் கூட மருத்துவ உதவியை நாடலாம். ஆனால், காலி இடத்தை நிரப்பும் பொருட்டு லேப் டெக்னீசியன் ஒருவரை உடனடியாக ஆவடி காவல் மருத்துவமனையில் நியமனம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post

மக்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

Posted by - May 13, 2023 0
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் புகுந்த பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். பாரதி…

உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

Posted by - December 2, 2024 0
சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல்துறைப்…

டிஜிட்டல் சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம்: பிரதமர் மோடி

Posted by - October 15, 2022 0
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட…

அம்பத்தூரில் ஆல் இன் ஆல் அழகுராஜா – 6

Posted by - December 17, 2025 0
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம். காலை நேர பரபரப்புடன் மக்கள் பேருந்துகளை பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பேருந்து…

அம்பத்தூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 22, 2022 0
அம்பத்தூர் மதுவிலக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள்கிழமை அன்று அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போதைப்பொருள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.