நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

809 0

சென்னை அரும்பாக்கம் ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அனைத்து தங்க நகைகளையும் மீட்ட கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு தலைமையிலான காவல் குழுவினரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.

கடந்த 13-ம் தேதி, இந்த வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ எடை கொண்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சந்தோஷ், பாலாஜி, முருகன் உள்ளிட்ட 7 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 31.7 கிலோ எடை கொண்ட நகைகளையும் போலீசார் விரைந்து செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து, கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு மற்றும் அவரது தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் என 48 பேரையும் நேரில் வரவழைத்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார்.

 

Related Post

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்

Posted by - March 1, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

அம்பத்தூரில் குட்கா பறிமுதல்

Posted by - September 6, 2023 0
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து…

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Posted by - December 2, 2024 0
மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் திரு.எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன்…

அம்பத்தூரில் டாஸ்மாக் பார் ஆக மாறிய நடைபாதை

Posted by - June 30, 2023 0
சென்னையில் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மாலை நேரங்களில் அருகேயுள்ள நடைபாதையே பாராக இயங்கி வருகின்றன. இது குடிமகன்களுக்கு குஷியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eighteen + four =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.