நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

679 0

சென்னை அரும்பாக்கம் ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அனைத்து தங்க நகைகளையும் மீட்ட கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு தலைமையிலான காவல் குழுவினரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.

கடந்த 13-ம் தேதி, இந்த வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ எடை கொண்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சந்தோஷ், பாலாஜி, முருகன் உள்ளிட்ட 7 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 31.7 கிலோ எடை கொண்ட நகைகளையும் போலீசார் விரைந்து செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து, கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு மற்றும் அவரது தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் என 48 பேரையும் நேரில் வரவழைத்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார்.

 

Related Post

நல்லாசிரியர் கிரேசியஸ், தி கிரேட்

Posted by - September 7, 2023 0
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

கிளாம்பாக்கத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா – 4

Posted by - June 8, 2025 0
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். ஞாயிற்றுக்கிழமை என்பதால், பயணிகள் பரபரப்பாக சொந்த ஊர் செல்லும் பேருந்தை நோக்கிச் ஓடிச் சென்றனர். சென்னை வந்தவர்கள் மாநகரப் பேருந்துகளில் போட்டி…

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

Posted by - April 2, 2022 0
சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை…

கட்டிக்குளம் கிராமத்தில் மின்சார வாரியம் “அபார சாதனை”

Posted by - July 4, 2024 0
ஊரின் பெயரை கம்பீரமாக தாங்கி நிற்கும் இந்த பெயர்ப் பலகைக்கு மேலே, மின்சாரக் கம்பி செல்கிறது பாருங்கள்… ஆனால், இதில் கம்பி மட்டும் தான் உள்ளது, மின்சாரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.