இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

1051 0

ந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில் பிரிட்டன் அரசு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஆண்டுதோறும் 3,000 இந்தியர்களுக்கு பிரிட்டன் அரசு கிரீன் விசா வழங்கவுள்ளது. .

இந்தோனேசியாவில் உள்ள பழங்கால இந்திய கலாச்சார அடையாளங்களை கொண்ட பாலி தீவில், சக்திவாய்ந்த உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 மாநாடு நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஸீ ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை, இந்தியப் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரிட்டன் அரசு விசா தொடர்பான முக்கிய அறிவிப்பை உடனடியாக வெளியிட்டது.

பிரிட்டன் அரசின் இந்த புதிய அறிவிப்பு மூலம், பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலான இந்தியர்கள் கிரீன் விசா மூலம் 2 ஆண்டுகள் வரை, பிரிட்டனில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளால் இந்த வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. சர்வதேச ஊடகங்களும் ஜி-20 மாநாட்டில் மோடி ஆற்றிய உரையை முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Related Post

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா

Posted by - November 9, 2021 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும்…

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்

Posted by - March 1, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு…

அன்பகம் கலையுடன் 47 ஆண்டு கால நட்பு: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Posted by - February 22, 2022 0
திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இத்திருமணத்தை…

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

6 + three =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.