ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை சுட்ட சிங்கப்பெண்

458 0

இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்.

விண்வெளி ஆய்வு, ஏவுகணைத் தயாரிப்பு, அணுகுண்டு சோதனை, தகவல் தொழில்நுட்பம், கிரிக்கெட் என்று சகலத் துறையிலும் சக்கைப்போடு போடும் இந்தியா, தற்போது ஒலிம்பிக்கிலும் ஒளிரத் தொடங்கியிருக்கிறது.

கடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி வீரர் நீரஜ் சோப்ரா இந்தியர்களின் கவுரவத்தை காப்பாற்றியது போல், தற்போது மனு பாக்கர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்த மனு பாக்கர், பள்ளி பருவத்தில் ஸ்கேட்டிங், டென்னிஸ், பாக்சிங் என சகல விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

2016 ரியோ ஒலிம்பிக்கின் போது ஷூட்டிங் மீது கவனத்தை திருப்பியுள்ளார். இதையடுத்து, 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தகுதி சுற்றிலேயே தனது துப்பாக்கி பழுதானதால், அப்போட்டியில் இருந்து வெளியேறினார் மனு பாக்கர்.

தற்போது, பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதலில் நமக்கு 2 வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்திருக்கிறார்.

ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்திருக்கிறார்.

பிரதமர் மோடி அவரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். கிருஷ்ணர் மீது பெரும் பக்தி கொண்டவர் மனு பாக்கர். ரியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய போது பகவத் கீதையின் வசனங்களே தனக்கு ஊக்கமளித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

– நிருபர் நாராயணன்

Related Post

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 91.18% பேருக்கு கேம்பஸ் பணி நியமன ஆணை

Posted by - May 10, 2023 0
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர். சத்யபாமா…

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் நிகில் முருகன்

Posted by - August 26, 2025 0
கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா…

நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

Posted by - August 22, 2022 0
சென்னை அரும்பாக்கம் ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அனைத்து தங்க நகைகளையும் மீட்ட கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு தலைமையிலான…

சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

Posted by - November 10, 2021 0
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்தலை குறிவைத்து புதிய…

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய்

Posted by - May 10, 2026 0
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றதும் அவர் பேசிய முதல் பேச்சு ஒட்டு மொத்த தமிழக மக்களின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.