ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை சுட்ட சிங்கப்பெண்

426 0

இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்.

விண்வெளி ஆய்வு, ஏவுகணைத் தயாரிப்பு, அணுகுண்டு சோதனை, தகவல் தொழில்நுட்பம், கிரிக்கெட் என்று சகலத் துறையிலும் சக்கைப்போடு போடும் இந்தியா, தற்போது ஒலிம்பிக்கிலும் ஒளிரத் தொடங்கியிருக்கிறது.

கடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி வீரர் நீரஜ் சோப்ரா இந்தியர்களின் கவுரவத்தை காப்பாற்றியது போல், தற்போது மனு பாக்கர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்த மனு பாக்கர், பள்ளி பருவத்தில் ஸ்கேட்டிங், டென்னிஸ், பாக்சிங் என சகல விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

2016 ரியோ ஒலிம்பிக்கின் போது ஷூட்டிங் மீது கவனத்தை திருப்பியுள்ளார். இதையடுத்து, 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தகுதி சுற்றிலேயே தனது துப்பாக்கி பழுதானதால், அப்போட்டியில் இருந்து வெளியேறினார் மனு பாக்கர்.

தற்போது, பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதலில் நமக்கு 2 வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்திருக்கிறார்.

ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்திருக்கிறார்.

பிரதமர் மோடி அவரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். கிருஷ்ணர் மீது பெரும் பக்தி கொண்டவர் மனு பாக்கர். ரியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய போது பகவத் கீதையின் வசனங்களே தனக்கு ஊக்கமளித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

– நிருபர் நாராயணன்

Related Post

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

ஆவடி உதவி ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 23, 2022 0
ஆவடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன்,…

இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

Posted by - November 16, 2022 0
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில்…

அமைச்சர் உதயநிதிக்கு வேல்ஸ் வேந்தர் ஐசரி கணேஷ் வாழ்த்து

Posted by - January 5, 2023 0
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான…

நெருப்பாக இருப்போம், இலக்கை அடைவோம்: விஜய்

Posted by - October 27, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குழந்தைகள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.