லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் “பரமசிவன் பாத்திமா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இசையை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தீபன் சக்கரவர்த்தி இசை அமைத்துள்ளார். ஏகாதசி பாடல்களை எழுதியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. “பரமசிவன் பாத்திமா” திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. படக்குழுவினருக்கு அன்பான வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் நிஜக்கதையை படமாக கொண்டு வந்துள்ளேன். இது மனிதநேயத்தைப் பேசும் படம். விமல் ஒரு மிகச்சிறந்த உழைப்பாளி என்றார்.
நடிகர் விமல் பேசுகையில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவாளர் சுகுமார், சாயா தேவி உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றார்.
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பேசுகையில், இப்படத்தில் உள்ள 5 பாடல்களும் வெவ்வேறு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் வேலை வாங்குவதில் மிகவும் திறமையானவர். படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநருக்கு நன்றி என்றார்.
பாடலாசிரியர் ஏகாதசி பேசுகையில், இந்த திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். அவை அனைத்தையும் நான் எழுதியுள்ளேன். இதில் பணியாற்றியது மகிழ்ச்சிகரமான அனுபவம். படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என்றார்.
நடிகை சேஷ்விதா ராஜு பேசுகையில், சிறந்த படைப்பாளிகளை கொண்ட தமிழ் சினிமாவில் எனது பயணம் “பரமசிவன் பாத்திமா” மூலம் தொடங்குகிறது. அனைவரும் படத்திற்கு ஆதரவு தர வேண்டும். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கு மிக்க நன்றி. என்றார்.
வரும் ஜூன் 6-ம் தேதி அன்று உலகெங்கும் “பரமசிவன் பாத்திமா” வெளியாகிறது.
– நிருபர் நாராயணன்