நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!

466 0

மிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால், குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

அடிதடி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதும் என்பது இப்பகுதிகளில் பெரும் சவாலானதாக இருக்கும். இதனால், தூத்துக்குடி தென் பாகம், சிப்காட் போன்ற காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். தப்பித்தவறி யாரேனும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் வந்துவிட்டால், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இணைந்து சதி செய்து அவர்களை பழிவாங்கும் போக்கு நிலவுகிறது. அப்படித்தான் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன், கடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றார். மேலும், தூத்துக்குடி எஸ்.பி., நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மக்கள் நலனுக்காக துடிப்பாக செயல்பட்டு வந்தார் எஸ்.ஐ. முத்தமிழ் அரசன். உதாரணமாக, சமீபத்தில் ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோது, அந்த பிரச்சனையை திறமையாக கையாண்டு போராட்டத்தை வாபஸ் பெற வைத்ததுடன், அவர்களுக்கு உடனடியாக மண்ணெண்ணெய் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார் முத்தமிழ் அரசன்.

இந்நிலையில், தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆகியோருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துடிப்பான நேரடி ஐபிஎஸ் அதிகாரியான தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சட்டத்தின் வழியில் செயல்பட்ட எஸ்.ஐ. முத்தமிழ் அரசனை மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியமர்த்த வேண்டும் என்பதே தூத்துக்குடி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதி வெல்லட்டும்…! மக்கள் காத்திருக்கிறார்கள்…!!

– நிருபர் நாராயணன்

Related Post

கேப்டன் விஜயகாந்த் காலமானார்

Posted by - December 28, 2023 0
நடிகர், அரசியல்வாதி, கல்வியாளர் என்ற வரிசையில் நல்ல மனிதராக மக்களால் கொண்டாடப்பட்ட கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71. மதுரை அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும்…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 91.18% பேருக்கு கேம்பஸ் பணி நியமன ஆணை

Posted by - May 10, 2023 0
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர். சத்யபாமா…

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

தலைவன் தலைவி – சினிமா விமர்சனம்

Posted by - July 28, 2025 0
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தலைவன் தலைவி. மதுரையில் ஹோட்டல் நடத்தி வரும் பத்தாம் வகுப்பில் பெயில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

16 − two =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.