நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

823 0

வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர், தொடர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சிராஜுதீன் என்பவர், ஜெஸிகாவுக்கு படவாய்ப்பு தருவதாகவும், காதலிப்பதாகவும் கூறி நெருங்கிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 18-ம் தேதி பவுலின் ஜெஸிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முன்னதாக நடிகை ஜெஸிகா தனது காதலர் சிராஜுதீனுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியிருக்கிறார். இதையடுத்து அவருக்கு கோயம்பேடு போலீஸார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகை ஜெஸிகாவின் தற்கொலைக்கு இவர் தான் காரணமா அல்லது வேறு யாரேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஜெஸிகா பயன்படுத்திய 3 செல்போன்களை கைப்பற்றி சைபர் க்ரைம் மற்றும் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், ஜெஸிகாவின் ஐ-போன் ஒன்றை காணவில்லை என அவரது சகோதரர் போலீஸாரிடம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நான்காவது போனில் முக்கிய ஆதாரங்கள் ஏதேனும் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், ஜெஸிகாவின் ஐபோன் குறித்து அவரது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

நடிகை ஜெஸிகா யூ டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு லட்சம் பேருக்கு மேல் பாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முகப்பு பக்கத்தில் Smile Always என்ற வாசகத்தை வைத்திருக்கிறார். ஆனால், அவரோ தனது மரணத்தால் பிறரை அழவைத்து விட்டார்.

Related Post

‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted by - September 6, 2025 0
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக…

தேசம் காக்கும் “எல்லைச்சாமிகள்”

Posted by - January 9, 2022 0
சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுங்குளிர்,…

“அந்தகன்” படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீடு

Posted by - August 8, 2024 0
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தகன் திரைப்படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் தியாகராஜன், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா…

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்

Posted by - August 28, 2024 0
வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை…

“கடன் கேட்டேன், வாய்ப்பு தந்தார் தயாரிப்பாளர்” – நடிகர் சந்தானம் நெகிழ்ச்சி

Posted by - May 8, 2024 0
‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

nine + eight =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.