ஒண்டிமுனியும் நல்லபாடனும் – சினிமா விமர்சனம்

100 0

கொங்கு வட்டாரப் பின்னணியில் உருவாகியுள்ளது “ஒண்டிமுனியும் நல்லபாடனும்” திரைப்படம்.

திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சுகவனம் இயக்கியுள்ளார்.

“பரோட்டா” முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒண்டிமுனி என்ற சிறுதெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்களின் நம்பிக்கையை யதார்த்தமான கதைக்களத்தில் இணைத்துள்ளனர். நிலத்தில் நன்கு உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்று அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். அந்தவகையில், கடவுளையும் மனிதனையும் பிணைத்து அதையே படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க கிடாய் ஒன்றை பலிகொடுப்பதாக வேண்டுதல் வைக்கிறார் விவசாயி நல்லபாடன். அதற்காக கிடாய் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். ஆனால், அதனை கடவுளுக்கு பலி கொடுப்பதில் அவருக்கு பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுக்கப்பட்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் அருமையாக நடித்துள்ளார். காடுமேடுகளில் வைக்கோல் சுமந்தபடி காலில் செருப்பு இல்லாமல் விவசாயி நல்லபாடனாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். இவருக்கு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புதிய இயக்குநர், புதிய நடிகர்கள் என்றாலும் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். நல்லபாடனின் மகனாக வரும் விஜயன், மகளாக நடித்துள்ள சித்ரா நடராஜன், மருமகன் விஜய் சேனாதிபதி என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கச்சிதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ.டி.விமலின் கேமரா நகர்வுகளுக்கு ஏற்ப, “மூடர்கூடம்” நடராஜன் சங்கரன் கச்சிதமாக இசை அமைத்துள்ளார்.

சிறிய பட்ஜெட் படம் என்றாலும், யதார்த்தமான காட்சிகள், இயல்பான நடிப்பு, அமைதியான இசை, வேகமான கதை நகர்வு என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்க முடியாத அற்புதம்.

இந்த திரைப்படம், நாமும் அந்த கிராமத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது. அதுவே இப்படத்தின் இமாலய வெற்றி.

தியேட்டரில் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படமாக வெளியாகியுள்ளது “ஒண்டிமுனியும் நல்லபாடனும்”.

மக்கள் வாழ்வியலை பேசும் இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் இன்னும் அதிகம் வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் இப்படம் உருவாக்கியுள்ளது.

– நிருபர் நாராயணன்

Related Post

கோவை சரளா எனது குரு: “செம்பி” இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு

Posted by - October 28, 2022 0
“செம்பி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் கலர்ஃபுல்லாக நடைபெற்றது. கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை…

கிறிஸ்டினா கதிர்வேலன் – சினிமா விமர்சனம்

Posted by - November 10, 2025 0
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு,…

பாரதிராஜாவை இயக்குகிறார் மனோஜ் பாரதிராஜா…!

Posted by - March 27, 2023 0
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில்…

அயலான் – சினிமா விமர்சனம்

Posted by - January 14, 2024 0
விவசாயம் மற்றும் உயிரினங்கள் மீது அக்கறை கொண்ட சிவகார்த்திகேயன் வேலை தேடி சென்னை வருகிறார். யோகிபாபு, கருணாகரன் நண்பர்களாக கிடைக்க சென்னையிலேயே செட்டில் ஆகிறார். இந்நிலையில், ஒரு…

அமைச்சர் உதயநிதிக்கு வேல்ஸ் வேந்தர் ஐசரி கணேஷ் வாழ்த்து

Posted by - January 5, 2023 0
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.