ஒண்டிமுனியும் நல்லபாடனும் – சினிமா விமர்சனம்

99 0

கொங்கு வட்டாரப் பின்னணியில் உருவாகியுள்ளது “ஒண்டிமுனியும் நல்லபாடனும்” திரைப்படம்.

திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சுகவனம் இயக்கியுள்ளார்.

“பரோட்டா” முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒண்டிமுனி என்ற சிறுதெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்களின் நம்பிக்கையை யதார்த்தமான கதைக்களத்தில் இணைத்துள்ளனர். நிலத்தில் நன்கு உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்று அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். அந்தவகையில், கடவுளையும் மனிதனையும் பிணைத்து அதையே படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க கிடாய் ஒன்றை பலிகொடுப்பதாக வேண்டுதல் வைக்கிறார் விவசாயி நல்லபாடன். அதற்காக கிடாய் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். ஆனால், அதனை கடவுளுக்கு பலி கொடுப்பதில் அவருக்கு பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுக்கப்பட்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் அருமையாக நடித்துள்ளார். காடுமேடுகளில் வைக்கோல் சுமந்தபடி காலில் செருப்பு இல்லாமல் விவசாயி நல்லபாடனாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். இவருக்கு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புதிய இயக்குநர், புதிய நடிகர்கள் என்றாலும் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். நல்லபாடனின் மகனாக வரும் விஜயன், மகளாக நடித்துள்ள சித்ரா நடராஜன், மருமகன் விஜய் சேனாதிபதி என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கச்சிதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ.டி.விமலின் கேமரா நகர்வுகளுக்கு ஏற்ப, “மூடர்கூடம்” நடராஜன் சங்கரன் கச்சிதமாக இசை அமைத்துள்ளார்.

சிறிய பட்ஜெட் படம் என்றாலும், யதார்த்தமான காட்சிகள், இயல்பான நடிப்பு, அமைதியான இசை, வேகமான கதை நகர்வு என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்க முடியாத அற்புதம்.

இந்த திரைப்படம், நாமும் அந்த கிராமத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது. அதுவே இப்படத்தின் இமாலய வெற்றி.

தியேட்டரில் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படமாக வெளியாகியுள்ளது “ஒண்டிமுனியும் நல்லபாடனும்”.

மக்கள் வாழ்வியலை பேசும் இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் இன்னும் அதிகம் வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் இப்படம் உருவாக்கியுள்ளது.

– நிருபர் நாராயணன்

Related Post

புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

Posted by - August 28, 2024 0
ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக…

மிஸஸ் & மிஸ்டர் – சினிமா விமர்சனம்

Posted by - July 13, 2025 0
‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா விஜயகுமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். அம்மா, மகள் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த…

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

Posted by - January 5, 2025 0
பட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி…

ஆயிரம் பொற்காசுகள் – சினிமா விமர்சனம்

Posted by - December 22, 2023 0
ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்துள்ள திரைப்படம் ஆயிரம் பொற்காசுகள். சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் கிராமத்தில் ஜாலி பேர்வழியாக உலா வருகிறார். அவரது…

தூத்துக்குடி கதையில் “லெஜெண்ட்” சரவணன்

Posted by - September 19, 2024 0
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 9 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.