உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

1222 0

ட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக் குருவி, அடைக்கலக் குருவி, ஊர்க்குருவி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

சிட்டுக்குருவிகள் மனிதர்கள் வாழும் பகுதிகளிலேயே வசிக்கும் தன்மை கொண்டவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண், பெண் இரண்டுமே முட்டைகளை பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சுற்றுச்சூழல் மாற்றங்கள், செல்போன் கோபுர கதிர்வீச்சு, விளைபயிர்களில் தெளிக்கப்படும் நச்சு உரங்கள் போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் வெகுவாக குறைந்துவிட்டன. கிராமப்புறங்களில் இன்னும் உள்ள தோட்டங்களுடன் கூடிய வீடுகளால் குருவிகளுக்கு எளிதாக உணவு கிடைக்கின்றன.

சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் பாதுகாக்க பறவை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க போராடி வருகின்றனர்.

வீட்டின் தாழ்வாரங்கள், பால்கனி, மொட்டி மாடியில் குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். மேலும், சிறுதானியங்களை அவற்றுக்கு வைக்க வேண்டும். மரப்பலகையில் செய்யப்பட்ட கூடுகளை வாங்கி வைத்தும் சிட்டுக்குருவி இனம் வாழ வழி வகுக்கலாம். நம் நண்பர்களான சிட்டுக்குருவிகள் இனம் அழியாமல் காக்க உறுதியேற்போம்.

Related Post

அம்பத்தூரில் டாஸ்மாக் பார் ஆக மாறிய நடைபாதை

Posted by - June 30, 2023 0
சென்னையில் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மாலை நேரங்களில் அருகேயுள்ள நடைபாதையே பாராக இயங்கி வருகின்றன. இது குடிமகன்களுக்கு குஷியாக…

நெருப்பாக இருப்போம், இலக்கை அடைவோம்: விஜய்

Posted by - October 27, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குழந்தைகள்,…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்

Posted by - October 6, 2022 0
ஐ.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம்…

தண்ணீரில் நெற்பயிர்… கண்ணீரில் விவசாயிகள்…

Posted by - November 13, 2021 0
தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு, காப்பீடு பதிவு பெற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.