போட்டித் தேர்வுகளில் சாதனை படைத்த வீரமங்கை

164 0

சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற மாணவி, 5 அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தந்தை சரவணன் ஆட்டோ ஓட்டுநர், தாயார் மாரியம்மாள் விவசாய தொழிலாளி. இவர்களது மகள் ஆனந்தி எம்.எஸ்.சி பிசிக்ஸ் பட்டதாரி.

மதுரை மீனாட்சி கல்லூரியில் 2021-ல் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்த இவர், வெறும் 4 மாதங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி அடுத்தடுத்து பணியிடங்களை பெற்று அசத்தியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் கிளர்க், மருத்துவத்துறையில் உதவியாளர், கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் ஆகிய அரசு பணிகளுக்கு முதலில் தேர்வாகியுள்ளார். தொடர்ந்து அடுத்தகட்டத்திற்கு தயாரான இவர் வனத்துறை அதிகாரி தேர்விலும் வெற்றி பெற்று, சிவகங்கை மாவட்ட மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தற்போது, புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் Gazetted Rank அந்தஸ்தில் வனத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, குரூப்-1 முதல்நிலைத் தேர்விலும் வெற்றி பெற்று பிரதானத் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

தினமும் அதிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து 6 மணி வரை படிப்பு, பின்னர் வீட்டு வேலையில் தாயாருக்கு உதவிகளை செய்துவிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கச் சென்றுவிடுவார் ஆனந்தி. அங்கு குரூப் ஸ்டடி முறையில் கற்று, தனது இலக்கை எட்டிப் பிடித்துள்ளார்.

கட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கிரேசியஸ் மற்றும் வருவாய் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோரின் வழிகாட்டுதலும் பயிற்சியும் தனக்கு உறுதுணையாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஆனந்தி. இவரது சகோதரர் அருண்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இன்றைய இளைய தலைமுறை ரீல்ஸ், வாட்ஸ்அப், சோசியல் மீடியா என்று மூழ்கிக் கிடக்கும் சூழலில், 5 அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ஆனந்தியின் சாதனை நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியது. கிராமத்தில் எளிய குடும்பத்தில் இருந்து வந்து வெற்றிகளை வசமாக்கி, தமது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சிங்கப்பெண் ஆனந்தியின் பணி சிறக்க, நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி. சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

Related Post

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

சின்னத்திரை தொகுப்பாளர் நடிகை ரம்யாவின் புத்தகம் வெளியீடு

Posted by - January 21, 2023 0
பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் எழுதிய ‘Stop Weighting’ புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம்…

வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த ஆதி குணசேகரன்

Posted by - September 9, 2023 0
சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது…

ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்

Posted by - October 6, 2022 0
ஐ.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ten − 8 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.